செவ்வாய், 22 ஜூலை, 2025

Privacy Policy

 Privacy Policy for marabuvazhkai.blog


At marabuvazhkai.blog, we value your privacy. This Privacy Policy explains what information we collect and how we use it.


- We do not collect any personal information without your consent.

- We may use cookies to improve user experience.

- Third-party vendors like Google may use cookies to serve ads.

- You can choose to disable cookies through your browser settings.


If you have any questions, contact us via [gomsenthil@gmail.com]


Updated: July 2025


திங்கள், 21 ஜூலை, 2025

விறகு வெட்டியும் தேவதையும்(நேர்மையின் பரிசு)

 சிறுவர்களுக்கு நல்லகதைகள் சொல்லி அவர்களை நற்குணம் மிக்கவராக உருவாக்க மரபுகளாகத் தொடரும் கதைகள்தான் சிறுவர் நீதி நெறிக் கதைகள்: சிறுவர்களுக்கு எளிதில் புரியும் விதமாக அவர்கள் மகிழும்படியும் ,பண்புகளைக் கற்றுக்கொள்ளும்படியும் ஏராளமான விலங்குகள், தேவதைக் கதைகள் உள்ளன.அவற்றில் 
ஒன்றுதான் விறகுவெட்டியும் தேவதையும். நேர்மையாக இருப்பதன் விளைவு என்ன என குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ள இந்தக் கதை உணர்த்தும்.

விறகு வெட்டியும் தேவதையும்

ஒரு கிராமத்தில் நேர்மையான ஒரு விறகு வெட்டி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.அவன் தன் தினசரி பிழைப்புக்கு பக்கத்து காட்டிற்கு சென்று விறகு வெட்டி விற்று வாழ்ந்தான்.எப்போதும்போல் ஒருநாள் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக்கொண்டிருந்தான்.




அவனுடைய இரும்புக் கோடாரி கைநழுவி ஆற்றில் விழுந்து மூழ்கியது.அதிர்ச்சியடைந்த விறகு வெட்டி "ஐயோ கடவுளே!இந்தக் கோடாலிதான் எனது குடும்பம் பசியில்லாமல் வாழ உறுதுணையாக இருந்தது"."இனி கோடாரி இல்லாமல் என்ன செய்வேன்?" என மிகவும் வருந்தினான்.




அப்போது ஆற்றிலிருந்து ஒரு தேவதை தோன்றி"ஏன் அழுகிறாய் விறகுவெட்டியே?"எனக் கேட்டது.அப்போது விறகு வெட்டி "எனது கோடரி கை நழுவி ஆற்றில் விழுந்து விட்டது இனி பிழைப்புக்கு என்ன செய்வேன்!"என வருந்தினான்.
                                      
அவன் வருத்தத்தைக் கண்ட தேவதை அவனுக்கு உதவ முன் வந்தது. இருந்தாலும் விறகு வெட்டியின் நேர்மையைப் பரிசோதிக்க எண்ணியது 
"அப்படியா?நான் உதவுகிறேன்!" என்ற தேவதை ஆற்றில் மூழ்கி "இதுவா எனப்பார்?" என ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்து தந்தது.விறகு வெட்டி இது என் கோடாரி அல்ல என மறுத்துவிட்டான்.



மீண்டும் தேவதை நீரில் மூழ்கி வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து தந்தது.விறகு வெட்டி "தேவதையே! இதுவும் எனது கோடரி அல்ல எனக் கூறி வாங்க மறுத்தான்.


மறுபடியும் ஆற்றில் மூழ்கிய தேவதை அவனுடைய உண்மையான இரும்புக் கோடரியைக் கொண்டு வந்து தந்தது.|அளவற்ற மகிழ்ச்சியடைந்த விறகு வெட்டி "ஆம்!இதுதான் என்னுடைய கோடரி!" என மகிழ்ந்து கூறினான்.




தனது வறுமையையும் பொருட்படுத்தாமல் 
விலையுயர்ந்த தங்கக்கோடாரிக்கும், வெள்ளிக் கோடாரிக்கும் ஆசைப்படாமல் நேர்மையாக இரும்புக்கோடாரிதான் என்னுடையது என்று விறகுவெட்டி கூறியதால் தேவதை அகமகிழ்ந்து  விறகுவெட்டியின் நேர்மைக்கு பரிசளிக்க எண்ணியது. இரும்புக் கோடாரியுடன், தங்கக்கோடாரியையும், வெள்ளிக்கோடாரியையும் சேர்த்து மூன்று கோடாரிகளையும் பரிசாக அளித்து "விறகு வெட்டியே! உனது நேர்மையைப் பாராட்டுகிறேன்..உனது நேர்மைக்குப் பரிசாக மூன்று கோடாரிகளையும் நீயே வைத்துக்கொள்.இதை வைத்து உனது வாழ்வை வளமாக்கிக்கொள்!" என்று கூறியது.

     இக்கட்டான சந்தர்ப்பத்திலும் நேர்மையைத் தவறவிடாத விறகு வெட்டி தேவதை பரிசளித்த கோடாரிகளினால் தனது வறுமை நீங்கி வாழ்வில் உயர்ந்தான்.

நீதி:
குழந்தைகளே! நீங்களும் இதுபோல் எப்போதும் நேர்மையை பெரிதாக எண்ணி இக்கட்டான சூழ்நிலைகளில் கூட |பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.நேர்மையுடன் செயல்பட்டால் இறைவன் எப்போதும் நம்மைக் கைவிடமாட்டார்.







புதன், 16 ஜூலை, 2025

வேப்பம்பூ பலன்கள்(NEEM FLOWER BENIFITS)

வேப்பம்பூவின் நன்மைகள் என்ன?

வேப்பம்பூ மனிதனுக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு அற்புதமான நன்கொடை ஆகும்."அசாடிராக்டா இண்டிகா"என அழைக்கப்படும் வேப்ப மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டது. வேப்பமரம் என்றாலே இலை,பட்டை, வேர்கள்,பூக்கள், கொட்டைகள், எண்ணெய் என எண்ணற்ற நன்மைகள் உடல் நலத்திற்காக உண்டு.செலவில்லாமல் மிக எளிமையாகக் கிடைக்கக்கூடியது.

தமிழ் நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும் , ஆந்திர மாநிலத்தில் யுகாதி அன்றும்  வேப்பம்பூ ரசம் அல்லது  வேப்பம்பூவுடன் வெல்லம், வாழைப்பழம் கலந்து பிரசாதமாக உண்ணத் தரப்படுகிறது.நமக்கு உடலில் ஏற்படும் வாத, பித்த,கபம் ஆகிய மூன்று தோஷங்களின் ஏற்றத்தாழ்வுகளை சமன் படுத்த  வேப்பம்பூ பயன்படுகிறது.வயிற்றுப்புழுக்கள்  வெளியேறவும்,எதிர்ப்புச் சக்தியை கூட்டவும் உதவி செய்கிறது

மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் பூக்கும் வேப்பம் பூக்களை வெயிலில் உலர்த்தி பதப்படுத்தி வைத்துக்கொண்டால் வருடம் முழுதும்பயன்படுத்தலாம்.வேப்பம்பூவின் பயன்கள்  என்னென்ன எனப் பார்க்கலாம்.வேப்பம்பூவைப் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?அறு சுவைகளில் கசப்புச்சுவை நாம் அதிகமாக எடுத்துக்கொள்வதில்லை. மற்ற கசப்புப் பொருள்களை விட வேப்பம்பூவில் மிதமான கசப்புச்சுவை இருப்பதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வேப்பம்பூ சாதம்:

எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை,வெங்காயம்,மிளகாய் தாளித்து 1ஸ்பூன் வேப்பம்பூவையும் சேர்த்து வதக்கி சாதம் கிளறி சாப்பாட்டுக்குமுன் 2,3 களம் சாப்பிடலாம்.

வேப்பம்பூ ரசம்:

தினமும் வைக்கும் தக்காளி ரசம், புளிசேர்த்து வைக்கும் ரசத்தில்  1 ஸ்பூன் வேப்பம்பூக்களை சேர்க்கலாம்.

வேப்பம்பூ சாதப்பொடி:

பருப்பு சாதப்பொடி தயார் செய்யும் போது உலர் வேப்பம்பூக்களை சேர்த்து அரைத்து வேப்பம்பூ சாதப்பொடி தயார் செய்யலாம்.சாதப்பொடியுடன் சேர்த்து சாதத்தில் பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

வேப்பம்பூ பச்சடி:

வாணலியில் சிறிது எண்ணய்விட்டு கடுகு தாளித்து வேப்பம்பூவை தக்கி தயிரில் சேர்த்தால் தயிர்ப்பச்சடி.

வேப்பம்பூ வற்றல்:

வேப்பம்பூவை உப்பு சேர்த்த மோரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் வேப்பம்பூ வற்றல் ஆகும். இதை வற்றல் குழம்பாக செய்யலாம்.

வேப்பம்பூ கஷாயம்:

நீரில் வேப்பம்பூக்களைப்போட்டுக் கொதிக்கவைத்தால் கஷாயம் .

என பலவிதங்களில் உணவில் சேர்த்து பலனடையலாம்.

வேப்பம்பூ பதப்படுத்துதல்:

உலர் வேப்பம்பூக்கள்:

வேப்பம்பூவை சேகரித்து நன்கு நீரில் அலசி நீரை வடித்துவிட்டு ஒரு பருத்தித் துணியில் பரப்பி நிழலில் மொறுமொறுவென்று உலர்த்த  வேண்டும். நன்கு உலர்ந்த பூக்களை கண்ணாடி கலனில் இறுக மூடி வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்.அவ்வப்போது அல்லது மாதம் ஒருமுறை வெயிலில் காயவைத்து பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வயிறு மந்தம், வயிறு உப்புசம், வயிறு வலி பிரச்சினைகள் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேப்பம்பூ கஷாயம் சிறந்த பலனைத் தரும்.

ஒரு டம்ளர் நீரில் ஐந்து வேப்பம்பூக்களைப்போட்டு பாதியாகச் சுண்டவைத்து கஷாயம் தயாரிக்க வேண்டும்.

வேப்பம்பூ நான்கு அல்லது ஐந்தை சிறிதளவு  வெல்லம் சேர்த்து மென்று தின்றால் பித்தம் நீங்கும்.உடல் எடை குறையும்.

வேப்பம்பூவில் புரதம்,கார்போஹைட்ரேட்டுகள்,கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சி , நார்ச்சத்து ஆகிய சத்துகள் இருப்பதால் உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறது.வேப்பம்பூவில் வெப்பகுணம் இருப்பதால் அதிக கலோரிகளை எரித்து எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

வேப்பம்பூ கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கு உண்டான ஹார்மோனை தடுக்க உதுவுவதால் தினமும் ஒரு ஒரு ஸ்பூன் புதிதாகப்பறித்த  வேப்பம்பூக்களை நீரில் ஊறவைத்து காலையில் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.அழகான சருமம் பெறலாம்.

கசப்புத்தன்மையுடன் இருக்கும் வேம்பம்பூ  வெப்பத்தன்மையும் கொண்டது. மலக்குடலில் இருக்கும் பூச்சிகள் வெளியேற வேப்பம்பூ சிறப்பாகச் செயலாற்றும். இனிப்பு அதிகம் சாப்பிடும் குழந்தைகள் அதிகமாக வயிற்றுப்பூச்சி தொல்லைக்கு ஆளாகும் .ஐந்து வேப்பம்பூக்களை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் பூச்சித்தொல்லை,வயிற்றுவலி நீங்கி நலம் பெறுவார்கள்.

வயிறு சுத்திகரிக்க பெரியவர்கள் மாதம் ஒருமுறை உலர் வேப்பம்பூக்களை பொடியாக்கி மேரில் கலந்து கொடுத்து வர  வேண்டும்.

உணவில் வேப்பம்பூக்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு, ரத்த அழுத்தம்,சருமப்பிரச்சினைகள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கும்.கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.வேப்பம்பூ ரத்தத்தை சுத்திகரிப்பதால் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை நம் உடலிலிருந்து வெளியேற்றுகிறது.

வேப்பம்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைலி, காைதுவலி நீங்கும்.

தலைமுடி அடர்த்தியாக வளர வேப்பம்பூவை கைப்பிடி எடுத்து உச்சந்தலையில் பரபரவென தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கி தலைமுடி அடர்த்தியாக மாறும்.இளநரை மாறும்.வாரத்தில் ஒருமுறை சில வாரங்களுக்கு பின்பற்ற வேண்டும்.

குறிப்பு: உடல் உஷ்ணம் இருப்பவர்கள் வேப்பம்பூவை மிகக்குறைவாகப் பயன்படுத்தவும். கர்ப்பிணிகள் தவிர்க்கவும்.


வெள்ளி, 11 ஜூலை, 2025

எறும்புகளும் வெட்டுக்கிளியும்(உழைப்பின் அருமை)

 எறும்புகளும் வெட்டுக்கிளியும்

(சிறுவர் நன்னெறிக் கதைகள்)

குழந்தைகளுக்கான இக்கதை வாழ்க்கையில் உழைப்பும், திட்டமிடுதலும், சேமிப்பும் அவசியம் என வலியுறுத்துகிறது. இளம் வயதிலேயே குழந்தைகள் இதுபோல் நன்னெறிக் கதைகளைக் கேட்டு வளருவதால் நல்ல ஒழுக்கமான பண்புகள் மனதில் பதிவதோடு பெரியவர்களானதும் இவ்வாறே இருக்கவேண்டும் என எண்ணுவர். அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி நல்ல மனிதர்களாக உருவாக்கும்.



ஒரு அடர்ந்த காட்டின் அழகான புல்வெளியில் வெட்டுக்கிளியும் 
எறும்புகளும் வசித்து வந்தன.



எறும்புகள் எந்நேரமும் உழைத்துக்கொண்டேயிருந்தன தானியங்களை குளிர், மழைக் காலத் தேவைக்காக சேமித்துக்கொண்டிருந்தன.




வெட்டுக்கிளி எறும்புகளை அழைத்து "நீங்கள் ஏன் எந்நேரமும்உழைத்துக்கொண்டே இருக்கின்றீர்கள்?எதிர்காலத்தை நினைத்து வருத்தப்படக்கூடாது.நிகழ்காலத்தை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். என்னைப்போல்இசைத்துக்கொண்டும் பாடிக்கொண்டும் உல்லாசமாய் இருக்கவேண்டியதுதானே?"என்று கிண்டல் செய்தது. அதற்கு எறும்புகள் "இப்போது உணவு சேகரித்தால்தான் குளிர்,மழைக் காலத்தில் பட்டினி கிடக்காமல் சாப்பிட முடியும்" என்றன.




காலம் மாறியது வெயில் காலம் சென்று மழைக்காலமும் வந்தது. எறும்புகள் அதன் இருப்பிடங்களில் ஓய்வெடுத்தன. தாங்கள் வெயில்காலத்தில் சேகரித்த உணவுகளை உண்டு மகிழ்ந்திருந்தன.ஆனால் வெட்டுக்கிளியோ தங்க இடமில்லாமல் மழையில் நனைந்தபடி உண்ண உணவில்லாமல் மிகுந்த சிரமப்பட்டது.


பசியோடிருந்த வெட்டுக்கிளி கடைசியாக எறும்புகளிடம் சென்று உணவு கேட்டது.அப்போது எறும்புகள் கேட்டன."நீதான் வருங்காலத்தை நினைத்து எப்போதும் கவலைப்படமாட்டேன் எனக் கூறினாயே?இப்போது உணர்கிறாயா?வெயில் காலத்தில் உழைத்து உணவும் இருப்பிடமும் சேகரித்து வைத்திருந்தால் இப்போது கஷ்டப்பட வேண்டாம் என்று!"     நிறைய தானியங்களைச் சேர்த்து வைத்திருந்த எறும்புகளும் வெட்டுக்கிளிக்கு மறுக்காமல் உணவளித்தன.




எறும்புகளிடம் மன்னிப்பு கேட்டு வருந்திய வெட்டுக்கிளி...கடின உழைப்பும், சேமிக்கும் பழக்கமும், சரியான திட்டமிடுதலும்  நம் எதிர்காலத்துக்குத் துணையாயிக்கும் என புரிந்து கொண்டேன். நேரத்தை வீணாக்காமல் நானும் இனிமேல் உழைத்து சேமிப்பேன் என உறுதி பூண்டது.

நீதி: இக்கதை நமக்கு கடின உழைப்பின் மேன்மையையும், திட்டமிடுதலையும், சேமிப்பையும் கற்றுத்தருகிறது.




முதலையும் குரங்கும்

kids moral stories

 முதலையும் குரங்கும்: சிறுவர் நன்னெறிக் கதைகள்

சிறுவர் பண்புக் கதைகள்

ஒரு அழகிய காட்டில் ஆற்றங்கரையில் ஒரு நாவல் மரம் இருந்தது. அந்த நாவல் மரத்தில் ஒரு குரங்கு வசித்து வந்தது.அது தினமும் நாவல் பழங்களை ருசித்துச் சாப்பிடுவதை ஆற்றில் வாழ்ந்த முதலை தினமும் பார்த்துக்கொண்டிருந்தது.குரங்கும் முதலையும் நண்பர்களாயினர்.




குரங்கு தினமும் முதலைக்கும் நாவல் பழங்களை உண்ணக் கொடுத்தது. நண்பர்கள் இருவரும் நாவல் பழங்களை தினமும் ருசித்து மகிழ்ந்தனர்.




நாவல் பழங்களை தினமும் சாப்பிட்ட முதலை தனது மனைவிக்கும் நாவல் பழத்தைக் கொண்டுபோய் தர ஆசை கொண்டது. குரங்கிடம் கேட்டு தனது மனைவிக்கும் நாவல் பழங்களை ருசிக்கக் கொடுத்தது.


நாவல் பழங்களைச்சாப்பிட்ட பெண் முதலை "இவ்வளவு ருசியாயிருக்கும் நாவல் பழங்களைச் சாப்பிடும் குரங்கை சாப்பிட்டால் எவ்வளவு ருசியாயிருக்கும் என எண்ணியது. தனது ஆண் முதலையிடம் "உடனே அந்தக் குரங்கைக் கொண்டு வா.நான் அதை ருசிக்க வேண்டும் "எனக் கூறியது.ஆண் முதலை நண்பனை எப்படி கொல்வது என எவ்வளவோ மறுத்துப்பார்த்தது.பெண் முதலை எனக்கு உடல் பலஹீனமாயிருக்கிறது.குரங்கின் இதயத்தைச் சாப்பிட்டால்தான்சரியாகும் என நாடகமாடியது.ஆண் முதலை"சரி குரங்கை அழைத்து வருகிறேன்" எனக் கூறிச் சென்றது.



குரங்கிடம் திரும்பி வந்த முதலை "ருசியான நாவல் பழங்களைக் கொடுத்த உனக்கு என் மனைவி விருந்து கொடுக்க அழைக்கிறாள்"எனக்கூறி முதுகில் ஏற்றி அழைத்துச் சென்றது.


அவர்கள் இருவரும் ஆற்றின்பாதி தூரத்தைக் கடந்தபிறகு..முதலை பேசத் தொடங்கியது."எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது..ஆனால் என் மனைவி மிகவும் சுகவீனமாக இருக்கிறாள்,தன்னைக் குணப்படுத்துவதற்கு ஒரு குரங்கின் இதயம்தான் மருந்து என அவள் உறுதியாக நினைக்கிறாள்.உனைக் கொன்று தின்பதைத்தவிர வேறு வழியே இல்லை.இனி உன்னோடு பேசி மகிழ முடியாது"என வருத்தத்துடன் கூறியது.



ஆனால் அந்த குரங்கு விரைவாக சிந்தித்து பேசத் தொடங்கியது, 'நண்பா, உன் மனைவியின் சுகவீனத்தை அறிந்து எனக்கும் கவலையாகத்தான் இருக்கிறது. அவளுக்கு உதவி செய்ய எனக்கும் ஆசை தான், ஆனால் என் இதயத்தை மறந்து போய் அந்த நாவல் மரத்தில் வைத்து விட்டு வந்து விட்டேன். நாம் திரும்பவும் அந்த மரத்திற்குச் சென்று இதயத்தை எடுத்து வந்து விடலாமா?'.
முதலையும் குரங்கின் வார்த்தையை நம்பி விட்டது. நீந்தும் திசையை மாற்றி மறுபடியும் அந்த நாவல் மரத்தை நோக்கிச் சென்றது. சட்டென்று குரங்கு தாவிச் சென்று மரத்தின் உச்சிக்கு சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு விட்டது.
குரங்கு பேசத் தொடங்கியது, "முட்டாள் முதலையே இதயத்தை உடலில் இருந்து எடுத்து காயப்போடமுடியாது என உனக்குத் தெரியாதா? உன்னை இனி நான் ஒருபொழுதும் நம்ப மாட்டேன், இந்த மரத்தில் இருந்து பழங்களையும் பறித்துத் தர மாட்டேன். இனி நீ என் நண்பனில்லை.என் முகத்தில் விழிக்காதே!" எனக்கூறி மரத்தில் ஏறிச் சென்று விட்டது.

முதலை தான் முட்டாளாக மாறியதை உணர்ந்தது.ஒரு நல்ல நண்பனையும் இனிய,சுவையான நாவல் பழங்கள் கிடைப்பதையும் இழந்துவிட்டேனே என வருந்தியது.அந்தக் குரங்கு சாதுர்யமாகவும் துரிதமாகவும் சிந்தித்த காரணத்தால்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.



நீதி: அறிவும் சமயோசித புத்தியும் நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும்.






ஞாயிறு, 23 மார்ச், 2025

சமச்சீர் உணவு(Balanced Diet)


சமச்சீர் உணவு(Balanced Diet)

சமச்சீர் உணவு அல்லது சரிவிகித உணவு என்றால் என்ன?

தினமும் ஒரு மனிதன் உடலுக்குத்தேவையான உணவில் இருக்க வேண்டிய பல்வேறு ஊட்டச்சத்துக்களின் சரியான அளவு ஆகும்.  உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் ,புரோட்டீன், வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து, கொழுப்புகள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ள பல்வேறு உணவுப்பொருட்கள்


1. ஒரு சீரான உணவு நீடித்த மேம்பட்ட ஆற்றலைக் கொடுத்து ஆரோக்கியமான உடலைக்கொடுக்கிறது. சரியான ஊட்டச்சத்துக்களை சேர்ந்த கலவையைச் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்கள் ஆற்றலைப் பராமரிக்க உதவும்.கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றனஅதே நேரத்தில் புரதங்கள், கொழுப்புகள் நிலையான ஆற்றலுக்குப் பயன்படுகின்றன.

2. வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க மிகவும் முக்கியம்.

 3.நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது: ஒரு சீரான உணவு இதய நோய், நீரிழிவு மற்றும் சில வகையான புற்றுநோய் போன்ற பல்வேறு நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவும். உதாரணமாக, பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்

.4.சிறந்த செரிமான ஆரோக்கியம்: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலமும், வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

5.ஆரோக்கியமான சருமம்: வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்ற சில ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். 

6.மேம்பட்ட தூக்கம்: டிரிப்டோபான், மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்த சில உணவுகள் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். சீரான உணவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். வழக்கமான உடல் செயல்பாடு, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவை நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு முக்கியம்.

7.உறுதியான எலும்புகள் மற்றும் பற்கள் இருப்பதுfor your bone strength

8.தெளிவான  ஆரோக்கியமான மனநிலையைப் பெறுவது.ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நல்ல நினைவாற்றலைக் கொண்ட மூளையின்  ஆரோக்கியத்துக்கு மிக முக்கியம்.இந்தஊட்டச்சத்துக்கள்உங்கள்மனஆரோக்கியத்தைமேம்படுத்தவும் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநல நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

9. எடை மேலாண்மை

ஒரு சரிவிகித உணவு கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், மைக்ரோநியூட்ரியண்டுகளின் சரியான விகிதத்தை வழங்குவதன்மூலம் சரியான எடையைப் பேணலாம்.weight loss combo

          உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் ,புரோட்டீன், வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார்ச்சத்து,கொழுப்புகள் எந்தெந்த உணவுகளில் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

கார்போஹைட்ரேட்:

         கார்போஹைட்ரேட்டுகள் உடலின் ஆற்றல் மூலமாகும். அவை குளுக்கோசாக உடைக்கப்படுகின்றன.இது நமது உடல் ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளில் ரொட்டி, பாஸ்தா, அரிசி, கோதுமை, ராகி, சிறு தானியங்கள், கிழங்குகள்  ஆகியவை அடங்கும்

புரதங்கள்:

       புரதங்கள் நமது உடலின் கட்டுமானத் தொகுதிகள் ஆகும் அவை உடலின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்புக்கு  அத்தியாவசியமாகிறது.புரதம் நிறைந்த உணவுகளில் இறைச்சி, மீன், முட்டை, பார் பொருட்கள், பருப்பு வகைகள், கொட்டைகள் ஆகியவை அடக்கம். 

     எடுத்துக்காட்டாக முளைகட்டிய தானியங்கள் கருப்பு பீன்ஸ், காராமணி, பச்சைப்பட்டாணி,,ராஜ்மா பீன்ஸ், சோயா, கொண்டைக்கடலை, பாசிப்பயறு,நிலக்கடலை ஆகியவற்றில் செறிந்த புரோட்டீன் உள்ளது.

கொழுப்புகள்:

கொழுப்புகள் ஆற்றலின் செறிவூட்டப்பட்ட மூலமாகும்.அவை கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை (A,D,E, மற்றும் K) உறிஞ்சுவதற்கும் உதவுகின்றன.கொழுப்புகள் நிறைந்த உணவுகளில் எண்ணெய்கள், வெண்ணெய் மற்றும் கொட்டைகள் ஆகியவை அடங்கும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்:

      நோய் எதிர்ப்புச் சக்தி, எலும்பு ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் உற்பத்தி போன்ற உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவசியம். அவை பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மறஅறும் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் காணப்படுகின்றன.

நார்ச்சத்து:

        நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நமது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.நார்ச்சத்து நிறஐந்த உணவுகளில் முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை அடங்கும்

நீர்: 

         நீர் வாழ்க்கைக்கு முக்கியமானது மற்றும் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது. இது உடல் வெப்பநிலையை பராமரிக்குவும், கழிவுகளை அகற்றவும், நமது மூட்டுகளை பசையுடன் வைக்கவும் உதவுகிறது.

        ஒரு சீரான உணவில் இந்த உணவு வகைகளின் கலவை சரியான விகிதத்தில் அடங்கும். ஒவ்வொரு உணவு வகையிலும் பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்வதும் அவசியம். ஏனெனில் வெவ்வேறு உணவுகள் வெவ்வேறு வகையான அளவுகளில் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

நினைவில் கொள்ளுங்கள், சமச்சீர் உணவுக்கான திறவுகோல் பல்வேறு வகைகளாகும். எந்த ஒரு தனிப்பட்ட உணவும் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க முடியாது.. எனவே உங்கள் உணவில் பல்வேறு வகையான உணவுகளைச் சேர்ப்பது முக்கியம்.

சமச்சீர் உணவை உருவாக்குதல்:

1 கப் சாதம், முளைகட்டிய தானியங்கள், பழங்கள், காய்கறிகளைக் கொண்டதாக இருக்கவேண்டும் நமது உணவு. தனிப்பட்ட உணவு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க முடியாது. அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க அளவுகளில் கவனம் செலுத்துங்கள்.

2. உணவுகளை அளவிடும் கோப்பைகளை பயன்படுத்தவும்.

3. ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும்.அவற்றில் அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்கள் உள்ளன.

4.ஒவ்வொரு வேளை உணவிலும் உங்கள் தட்டில் பாதியை பழங்கள் மற்றும் காய்கறிகளாலநிரப்ப முயற்சிக்கவும்.

5. முழு தானியங்களைத் தேர்ந்தெடுக்கவும். இவை நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய சத்துக்களின் நல்ல மூலமாகும்.

6. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல்நலப்பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்


ஆண்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு சத்துகள் அட்டவணை:( இயல்பான உடல் இயக்கத்திற்கு)

கலோரிகள் (Calories)2,500 Kcal (இயல்பான உடல் இயக்கத்திற்கும் அன்றாட செயல்பாடுகளுக்கும்)
புரதம் (Protein)56-75 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates)300-350 கிராம்
நார்ச்சத்து (Fiber)30-38 கிராம்
கொழுப்பு (Fat)70-90 கிராம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids)1.6 கிராம்
கால்சியம் (Calcium)1,000-1,200 mg
இரும்புச்சத்து (Iron)8-11 mg
மிக்னீசியம் (Magnesium)400-420 mg
தயமின் (Vitamin B1)1.2 mg
ரிபோஃப்ளேவின் (Vitamin B2)1.3 mg
நியாசின் (Vitamin B3)16 mg
பிற வி.பி (Vitamin B6, B12)1.7 mg (B6), 2.4 mcg (B12)
விடமின் C90 mg
விடமின் D15 mcg (600 IU)
விடமின் E15 mg
ஃபோலேட் (Folate - Vitamin B9)400 mcg
சோடியம் (Salt - Sodium)<2,300 mg
பொட்டாசியம் (Potassium)3,400 mg
துத்தநாகம் (Zinc)11 mg


அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு 3000 -3500 கலோரிகள் தேவைப்படும்.
புரதம் அதிகம் பெற முட்டை, பாதாம், துவரம்பருப்பு,பச்சைப்பயறு ,மீன் போன்றவற்றை சேர்க்கலாம்.நார்ச்சத்து அதிகமாகும்போது ஜீரணச் செயல்முறைகள் சிறப்பாக இருக்கும்.

பெண்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் (சராசரி அளவு) 

ஊட்டச்சத்துபரிந்துரைக்கப்பட்ட அளவு
கலோரிகள் (Calories)2,000 Kcal (இயல்பான நிலைக்கு)
புரதம் (Protein)46-65 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் (Carbohydrates)250-300 கிராம்
நார்ச்சத்து (Fiber)25-30 கிராம்
கொழுப்பு (Fat)60-75 கிராம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் (Omega-3 Fatty Acids)1.1 கிராம்
கல்சியம் (Calcium)1,000-1,200 mg (கர்ப்பிணி/இரைப்பை நீக்கம் செய்யப்பட்ட பெண்களுக்கு 1,200 mg)
இரும்புச்சத்து (Iron)18 mg (50 வயதிற்கும் குறைவான பெண்கள்) / 8 mg (50+ வயது)
மிக்னீசியம் (Magnesium)310-320 mg
தயமின் (Vitamin B1)1.1 mg
ரிபோஃப்ளேவின் (Vitamin B2)1.1 mg
நியாசின் (Vitamin B3)14 mg
விடமின் B61.5 mg
விடமின் B122.4 mcg
விடமின் C75 mg
விடமின் D15 mcg (600 IU)
விடமின் E15 mg
ஃபோலேட் (Folate - Vitamin B9)400 mcg (கர்ப்பிணிப் பெண்களுக்கு 600 mcg)
சோடியம் (Salt - Sodium)<2,300 mg
பொட்டாசியம் (Potassium)2,600 mg
துத்தநாகம் (Zinc)8 mg

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அட்டவணை:multigrains

வயதுகலோரிகள் (Calories)புரதம் (Protein) (g)கார்போஹைட்ரேட்டுகள் (Carbs) (g)நார்ச்சத்து (Fiber) (g)கொழுப்பு (Fat) (g)கல்சியம் (Calcium) (mg)இரும்புச்சத்து (Iron) (mg)
1-3 வயது1,000-1,400 Kcal13-16 g130-160 g19 g30-40 g700 mg7 mg
4-8 வயது1,400-1,600 Kcal19-22 g150-180 g25 g35-50 g1,000 mg10 mg
9-13 வயது (ஆண்)1,800-2,200 Kcal34 g200-250 g31 g45-70 g1,300 mg8 mg
9-13 வயது (பெண்)1,600-2,000 Kcal34 g180-230 g26 g45-70 g1,300 mg8 mg
14-18 வயது (ஆண்)2,200-3,200 Kcal52 g250-300 g38 g70-90 g1,300 mg11 mg
14-18 வயது (பெண்)2,000-2,400 Kcal46 g220-270 g26 g70-80 g

முக்கியகுறிப்புகள்:
இது பொதுவான ஊட்டச்சத்து வழிகாட்டுதலாகும்.பெண்களின் வயது,உடல்நிலை, கர்ப்பகாலம்,உடல் உழைப்பு, உடற்பயிற்சி போன்றவற்றைப்பொறுத்து அளவு மாறுபடும்.

கர்பிணிப்பெண்கள்,மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் தேவைப்படும்.
இரும்புச்சத்து ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் தேவைப்படுகிறது.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கர்ப்ப காலத்திலும்,முதிய வயதிலும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
50 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு கால்சியம் மற்றும் விட்டமின் டி தேவை.
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.flakes

சமச்சீர் உணவுகளை உண்பது கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் நமக்குப் பிடித்த உணவுகளை இழப்பது என்பது அல்ல.மாறாக இது அனைத்து உணவிலுள்ள சத்துக்களின் முக்கயத்துவத்தைப் புரிந்து பல்வேறு உணவுகளை இன்னும் நம் உணவில் சேர்ப்பது பற்றியதாகும்.சமச்சீர் உணவு படிப்படியாக செயல்படுத்த வேண்டிய பயணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இது நமது உணவுப்பழக்கங்களில்சிறிய நிலையான மாற்றங்களைச் செய்வது பற்றியது.எனவே இன்றே தொடங்குங்கள்.கவனத்துடன் உணவுகளைத் தேர்வு செய்து ஆரோக்கிய வாழ்க்கை முறையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். 
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💨💨💨💨💨
  

சனி, 1 மார்ச், 2025

குழந்தைகளுக்கான தோட்டக்கலை

  குழந்தைகளுக்கான தோட்டக்கலை: 

இயற்கையை நேசித்து அதனுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், பசுமை உலகை அறிந்து ஈடுபடவும் தோட்டக்கலை ஒரு சிறந்த வழியாகும். இது அவர்களை மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யப்படத்தக்க மனநிலையை உருவாக்கவும் உதவுகிறது.அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதோடு மட்டுமல்லாமல் பொறுமை, படைப்பாற்றல் ஆகியவற்றையும் வளர்க்க தோட்டக்கலை உதவுகிறது.

தாவர வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும், பொறுப்பை ஊக்குவிக்கவும் குழந்தைகள் தோட்டம் ஒரு அற்புதமான வழியாகும். உங்களிடம் பெரிய கொல்லைப்புறம் இருந்தாலும் சரி, சிறிய பால்கனி இருந்தாலும் சரி, குழந்தைகளுக்கான தோட்டத்தை உருவாக்குவது  வேடிக்கையாக கற்றலில் ஈடுபடுவதாக  இருக்கும்.

குழந்தைகளுக்கான தோட்டத்தின் நன்மைகள்:

  1. கல்வி வளர்ச்சி : குழந்தைகள் தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி, ஒளிச்சேர்க்கை மற்றும் சூழலியலின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
  2. உடல் செயல்பாடு : தோட்டக்கலை குழந்தைகளை வெளியில் சென்று சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிக்கிறது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.
  3. பொறுப்பு : தாவரங்களைப் பராமரிப்பது குழந்தைகளுக்குப் பொறுப்புணர்வு மற்றும் வழக்கமான பராமரிப்பின் முக்கியத்துவத்தைக் கற்பிக்கிறது.
  4. படைப்பாற்றல் : குழந்தைகள் தங்கள் சொந்த தோட்ட இடத்தை வடிவமைப்பது, படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.
  5. புலன் மேம்பாடு : தோட்டக்கலை மண்ணின் வாசனையிலிருந்து பூக்களின் துடிப்பான வண்ணங்கள் வரை ஐந்து புலன்களையும் ஈடுபடுத்துகிறது.

எது குழந்தைகளுக்கு ஏற்ற தோட்டக்கலை?

தோட்ட இடத்தை உருவாக்குதல்

  1. இடம் : நிறைய சூரிய ஒளி விழும் மற்றும் குழந்தைகள் அணுகுவதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்யவும்.
  2. அளவு : சிறியதாகத் தொடங்குங்கள், குறிப்பாக உங்கள் குழந்தையின் முதல் தோட்டக்கலை அனுபவமாக இருந்தால். ஒரு சில தொட்டிகள் அல்லது ஒரு சிறிய நிலம் சிறந்தது.
  3. கருவிகள் : சிறிய கைகளுக்கு தோட்டக்கலையை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற, குழந்தை அளவிலான கருவிகளை வழங்குங்கள்.

குழந்தைகள் செய்யும் தோட்டக்கலை எளிமையாகவும்  அவர்களை ஈர்ப்பதாகவும், ஆச்சர்யத்தைக் கொடுக்க வல்லதாகவும் இருக்க வேண்டும்.பின் வரும் சில யோசனைகள் அவர்கள் மகிழ்ச்சியாக தோட்டக்கலையில் ஈடுபட உதவும்:

1. சுலபமாக வளரக்கூடிய செடிகள்: சூரியகாந்தி, துளசி, சாமந்தி, காசித்தும்பை,  பழ வகைகளில்  தக்காளி கிழங்கு வகைகளில் காரட், முள்ளங்கி.seeds link

 சூரியகாந்தி : இவற்றை வளர்ப்பது எளிது, அவற்றின் உயரமான, பிரகாசமான பூக்கள் குழந்தைகளை வசீகரிக்கும் என்பது உறுதி.

செர்ரி தக்காளி : விரைவாக முளைக்கும் மற்றும் கொடியிலிருந்து சாப்பிடுவது வேடிக்கையாக இருக்கும்.

சாமந்திப்பூக்கள் : கடினமான மற்றும் வண்ணமயமான, தோட்டத்திற்கு துடிப்பைச் சேர்க்க ஏற்றது.

முள்ளங்கி : வேகமாக வளரும் மற்றும் சில வாரங்களுக்குள் அறுவடை செய்யலாம், இதனால் குழந்தைகள் ஆர்வமாக இருப்பார்கள்


2.DIY  தோட்டக்கருவிகள்: சிறிய கிண்ணங்கள், கூடைகள் ,பாலித்தீன் கவர்கள் கொண்டு குழந்தைகளே தோட்டத்திற்குத் தேவையான பொருட்களை தயார் செய்யலாம்.garden tools(you click here i will get a cimmission)

3.சமயலறையிலிருந்து :கடைகளில் வாங்கக்கூடிய தக்காளி, மிளகாய்,வெங்காயம், பூண்டு, புதினா  ஆகியவற்றில் இருந்து எளிமையாக நாமே விதைகள் தயாரிக்கப் பழக்கலாம்.நாம் சாப்பிட்ட பழ வகைகளிலிருந்து கொட்டைகளை தொட்டியிலோ அல்லது தோட்ட மண்ணிலோ புதைத்து முளைக்க வைக்கப் பழக்கலாம்.உதாரணம் : மாம்பழம்.

4.சிறிய மிதக்கும் தோட்டம்(mini floating garden):  டப்பாக்களில் நீர் நிறைத்து தாமரை, அல்லி, பிஸ்டினியா , ஹைட்ரில்லா போன்ற வீட்டில் வளர்க்கும் தாவரங்களை வளர்க்கலாம்

5.பட்டாம்பூச்சித்தோட்டம்:பட்டாம்பூச்சிகள் உலகளவில் குறைந்து வருவதால் நம் குழந்தைகளின் பங்களிப்பாக  பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் மலர்ச்செடிகளை வளர்க்கலாம்.சாமந்திப்பூ, காசித்தும்பை, ஜீன்னியா போன்றவை.

6.குழந்தைகளுக்கான  விளையாட்டுத்தோட்டம்: மண், செங்கல் போன்றவற்றில் பசுமை விளையாட்டு பகுதிகள் அமைத்து குந்தைகள் அங்கே  விளையாட்டாய் தோட்டம் செய்யலாம்.

7.பால்கனித்தோட்டம்:பால்கனியில் சிறிய தொட்டிகள் பழைய பிளாஸ்டிக் டப்பாக்கள், பாலித்தீன் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு எளிமையாக செலவு குறைவாக தோட்டம் அமைத்து குந்தைகளைப்பழக்கலாம்.garden pots

மண்ணின் வகைகள், இயற்கை உரம் பற்றிய செயல்பாடுகள் ஆகியவற்றை குந்தைகளுக்குச் சொல்லித்தரலாம். காய்கறி கழிவுகளிலிருந்து நாமே உரம் தயாரிப்பது பற்றி கற்க வைக்கலாம்.

8. பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்:பூச்சித்தாக்குதல் அதற்கான தீர்வுகளை சொல்லித்தரலாம்

செயல்பாட்டில் குழந்தைகளை ஈடுபடுத்துதல்

  1. திட்டமிடல் : குழந்தைகள் என்ன, எங்கு நடவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட உதவுங்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த தாவரங்களுக்கு லேபிளிட தோட்டக் குறிப்பான்களைப் பயன்படுத்தவும்.
  2. நடவு : விதைகள் அல்லது நாற்றுகளை நடுவதில் அவர்களை ஈடுபடுத்துங்கள். அவர்களின் தாவரங்களுக்கு எவ்வாறு முறையாக தண்ணீர் ஊற்றுவது மற்றும் பராமரிப்பது என்பதைக் காட்டுங்கள்.
  3. அறுவடை : பழுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பறிக்க அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கடின உழைப்பைக் கொண்டாடவும்.

வெற்றிகரமான குழந்தைகள் தோட்டத்திற்கான உதவிக்குறிப்புகள்

  • பொறுமையாக இருங்கள் : தோட்டக்கலை என்பது ஒரு கற்றல் செயல்முறை, தவறுகள் அதன் ஒரு பகுதியாகும்.
  • சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள் : குழந்தைகள் கவனிக்கும் ஒவ்வொரு புதிய தளிர் அல்லது பூக்கும் பாராட்டுங்கள்.
  • வேடிக்கையாக ஆக்குங்கள் : தோட்டக்கலை நடவடிக்கைகளில் விளையாட்டுகள் அல்லது கதைசொல்லலை இணைத்து அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருங்கள்.

முடிவில், குழந்தைகள் தோட்டம் என்பது வெறும் தாவரங்களின் தொகுப்பை விட அதிகம் - இது வளர்ச்சி, கற்றல் மற்றும் வேடிக்கைக்கான இடம்.குழந்தைகளின் தன்னம்பிக்கை பெருகும் இடம். தோட்டக்கலையில் குழந்தைகளை ஈடுபடுத்துவதன் மூலம், நீங்கள் ஒரு பசுமையான விஷயத்தை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மீதான அன்பையும் வளர்த்துக் கொள்ளலாம்.